அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

 

சிங்கம்புணரி ஆக.27: சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆஷா அஜித் நேற்று திடீர் ஆய்வு செய்தார். இதில் மருத்துவமனையின் தரம், உள் நோயாளிகளின் வார்டுகள், சமையலறை, ஆய்வகம், மருந்துகள் சேமிப்பு அறை, பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது 16 வயது மாணவர் பள்ளிக்கூடம் சென்று படிக்கச் சொன்ன அப்பாவுடன், கோபித்து விட்டு விஷம் குடித்து சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்தார்.

மாணவரிடம் விசாரணை நடத்திய கலெக்டர்,மாணவனுக்கு அறிவுரை வழங்கி படிக்க கூறினார். பக்கத்து பெட்டில் மற்றொரு மாணவர் 12ம் வகுப்பு முடித்துவிட்டு வேலைக்கு சென்ற நிலையில் அம்மா திட்டியதற்காக விஷம் குடித்து சிகிச்சையில் உள்ளார். இவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கவும் கலெக்டர் தெரிவித்தார். இதில் தலைமை மருத்துவர் அயன் ராஜ் உள்ளிட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் இருந்தனர்.

The post அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: