சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முடிவு பெற்ற பல்வேறு கட்டடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
* மதுரை அன்னை சத்தியா அம்மையார் அரசு குழந்தைகள் காப்பகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
ரூ.5 கோடியில் துயிற்கூடங்கள், சமையலறை, வகுப்பறைகள், அலுவலக அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் திறக்கப்பட்டது.
* சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
* ஒரகடத்தில் உள்ள இன்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு நகர்வு மேலாண்மை மையத்தையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
* போக்குவரத்து பிரிவிற்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்தையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
* பெரம்பலூரில் ரூ.2.54 கோடியில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
* சென்னை நொளம்பூரில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தையும், வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
* வாணியம்பாடியில் புதிய பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
* தோல் பதனிடுதல் துறையில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் வாணியம்பாடியில் ரூ.2.37 கோடியில் அமைய உள்ளது.
* மத்திய காலணி பயிற்சி நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதிய கட்டடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சியில் துறை சார்ந்த அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் சண்முகம், துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.