அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா முதல் நாள் கொடியேற்றம் மே3ம் தேதி தேரோட்டம்

 

குளித்தலை: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா முதல் நாள் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் மே 3ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலையில் உள்ள சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ரத்தகிரீஸ்வரர் கோயிலாகும். இந்த கோயில் 2017 படி மலை உச்சியில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா12 நாள் நடைபெறுவது வழக்கம். உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் வெளி மாவட்டம், வெளி மாவட்ட மாநிலத்திலிருந்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொள்ளும் விழாவாக இருந்து வருகிறது. இச்சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் சித்திரை தேர் திருவிழா 22ம் தேதி கால்கோள் விழா உடன் தொடங்கியது.

தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு மேல் 9 மணிக்குள் விக்னேஸ்வர் பூஜை செய்து 12 மணிக்குள் மலை உச்சியில் முதல் நாள் நிகழ்ச்சியாக கொடியேற்றத்துடன் தொடங்குகியது. இரவு புஷ்ப விமானத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. முக்கிய விழாவான 5ம் நாள் 29 ம் தேதி பகல் பல்லக்கு இரவு 7 மணிக்கு மேல் எட்டு மணிக்குள் விருச்சிக லக்னத்தில் திருக்கல்யாணம், மாலை ஒன்று பாதையில் ஊஞ்சல் பொன்னிடும் பாறையில் சுந்தருக்கு பொற்கிழி அளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவில் 8ம் நாள் மே 2ம் தேதி மதியம் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, பகல் பல்லக்கு இரவு 12 மணி அளவில் சுவாமி குதிரை வாகனம் அம்மன் புஷ்ப வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது.

9ம் நாள் திருவிழா மே 3ம் தேதி புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு தேர் ஏறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று காலை 5.30 மணிக்கு மேல்6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அறநிலை துறை உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் அனிதா மற்றும் கோயில் குடி பாட்டு காரர்கள், சிவாச்சாரியார்கள் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா முதல் நாள் கொடியேற்றம் மே3ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: