அதிரசம்

பாகு செய்யவெல்லத்தை, தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். பிறகு கொதிக்க விடவும். கெட்டி கம்பிப்பதமாக வந்தவுடன் ஏலக்காய் பொடி கலக்கவும். ரெடியாக உள்ள மாவை ஒரு தாம்பாளத்தில் கொட்டிப்பரத்தி, தயாராக வைத்துள்ள வெல்லப்பாகை அதன்மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கைவிடாமல் கிளறவும். பிறகு 2 டீஸ்பூன் நெய் சேர்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். 2 அல்லது 3 நாள் கழிந்த பிறகு ஒரு வாழை இலையில் சிறு சிறு வட்டங்களாகத் தட்டி, நெய்யிலோ எண்ணெயிலோ பொரித்தெடுக்கவும்.குறிப்பு: மாவு ஈரப்பதமாக இருக்க வேண்டும். அதிரசம் மாவு ரெடியான தினமே பொரிக்கக் கூடாது.; பாகை கீழே இறக்கி வைத்து தாம்பாளத்தில் கிளற வேண்டும். அடுப்பின் மேல் கிளறக்கூடாது.

The post அதிரசம் appeared first on Dinakaran.

Related Stories: