பிறப்பு சான்றிதழில் குழந்தை பெயர் பதிய 5 ஆண்டு அவகாசம்: தமிழக அரசு

சென்னை: பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய தமிழக அரசு மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் அளித்தது. 1.1.2000க்கு முன் பிறந்த குழந்தைகளின் பெயரை பதிவு செய்ய தவறியவர்களுக்கு மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளது. 31.12.2019ல் முடிந்த நிலையில் இந்திய தலைமைப்பதிவாளர் மேலும் 5 ஆண்டு அவகாசம் வழங்கியுள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள், உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் நலன் கருதி அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டதிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தை பெயரை கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். ஓராண்டுக்கு பின் குழந்தையின் பெயரை 15 ஆண்டுகளுக்குள் உரிய தாமத கட்டணம் செலுத்தி பதிவு செய்திடலாம்.

குழந்தையின் பெயரை பதிவு செய்ய விஏஓ, பேரூராட்சி செயல் அலுவலர், துப்புரவு - சுகாதார ஆய்வாளர்களை அணுகலாம்.

Related Stories: