புதுச்சேரி : புதுச்சேரியில் குடும்பம் குடும்பமாகவும், நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சென்றும் வாக்களிக்க தடையில்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் பூர்வா தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் அசம்பாவிதங்களை தடுக்க 7ம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊர்வலமாக செல்லவும் ஐந்து நபர்களுக்கு மேல் கூடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து புதுவை மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராஜாங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டிருந்தது.
புதுச்சேரியில் குடும்பம் குடும்பமாகவும், நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சென்றும் வாக்களிக்க தடையில்லை : 144 தடை குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்
