ZEE5 ஓடிடி தளத்தில் கால்பந்து போட்டிகள் மூலம் கிடைக்கும் 15% சந்தா வருவாயை இந்தியாவில் கால்பந்து விளையாட்டை அடிமட்ட அளவில் மேம்படுத்துவதற்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் முறையான போட்டிகள் நடத்தப்பட்டு, திறமையான இளம் இந்திய வீரர்கள் உலக மேடைக்குக் கொண்டு செல்லப்படுவார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
