சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரி மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம், கடலூரில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. தொண்டி, நுங்கம்பாக்கம், வேலூரில் தலா 103, நாகை, தஞ்சை, பரங்கிப்பேட்டை, திருச்சியில் 102, மதுரை நகரம், திருத்தணியில் தலா 101, மதுரை விமான நிலையத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
