சென்னை: ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் கைதான கோபியை 18ம் தேதி வரை காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. எழும்பூர் நீதிமன்ற உத்தரவை அடுத்து கோபியை புழல் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகளை திருடிய வழக்கில் கோபி கைது செய்யப்பட்டார்.
