×

சித்தோட்டில் நகை திருடிய வாலிபர் கைது

 

பவானி, மே 7: சித்தோடு வசந்தம் பாரடைஸ் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது வீட்டில் நேற்று முன் தினம் இரவு நுழைந்த மர்ம நபர் வீட்டில் இருந்த 10.3/4 பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளார்.சித்தோடு தனிப்பிரிவு போலீசார் விசாரணையில் நகை திருட்டில் ஈடுபட்டது சித்தோடு, கன்னிமார்காடு பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் (23) என்பது தெரிய வந்தது.இதையடுத்து, சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் போலீசார் கிருஷ்ணகிரியில் பதுங்கி இருந்த அஜித் குமாரை நேற்று கைது செய்து நகையையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Sitthode ,Bhavani ,Kalaichelvi ,Vasantham Paradise ,Sitthode Special Cell Police ,
× RELATED வைகாசி விசாக திருவிழா தேர்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்