சென்னை: தமிழக விவசாயிகளை நாக்பூரில் கைது செய்த மஹாராஷ்டிர காவல் துறையை கண்டிக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ‘தமிழ்நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள் என மஹாராஷ்டிரா காவல் துறை கட்டாயப்படுத்தியுள்ளது. டெல்லி சென்று போராட விவசாயிகளை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். ஜனநாயக வழியில் போராடும் உரிமையைப் பறிக்கக் கூடாது’ எனவும் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.
