மதுரை: மாதவிடாய் காலத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கக் கோரிய மனுவில், இது தொடர்பான விதிகளை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் விவரங்களைத் தெரிவிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
