சென்னை: தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 72,627 பேர் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வில் 61,306 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், இத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மொத்தம் 16,199 இடங்கள் உள்ள நிலையில், விரைவில் கலந்தாய்வு தொடங்க வாய்ப்புள்ளது.
