ஈரோடு, ஜூலை 9: ஈரோடு மாநகராட்சி பெரியவலசு கொங்கு நகர் 3வது வீதியில் சமையல் காஸ் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. அப்போது, அங்கு ஏற்கனவே பதிக்கப்பட்டு இருந்த மாநகராட்சி குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, தண்ணீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு மர கடைக்குள் புகுந்த நீர் குளம்போல் தேங்கியது. இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் மரம் அறுக்கும் எந்திரம் மற்றும் மரக்கட்டைகள் சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்து மாநகராட்சி பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீர் ஓடியதால் அந்த பகுதியில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
