திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொழிலதிபர் ஆனந்த் அம்பானி சாமி தரிசனம் செய்தார். கோயிலின் பயன்பாட்டுக்காக ரூ.27.50 கோடியில் 25 மின்சார பேருந்துகள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் கட்டமைப்பு, ஓட்டுநர் ஊதியம் அனைத்துமே ரிலையன்ஸ் நிறுவனமே வழங்கும் என தெரிவித்துள்ளார்.
