சென்னை: தமிழ்நாட்டில் 56 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்ட எஸ்.பியாக குத்தாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை எஸ்.பியாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட எஸ்.பியாக விவேகானந்த சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யாக சாய் பிரனீத் நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட எஸ்.பியாக கவுதம் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்ட எஸ்.பியாக அருண் கபிலன் நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பியாக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட எஸ்.பியாக யாதவ் கிரீஷ் அசோக் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட எஸ்.பியாக யாதவ் தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்ட எஸ்.பியாக கெல்கர் சுப்பிரமணியன் பாலச்சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்ட எஸ்.பியாக கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்ட எஸ்.பியாக விஸ்வேஷ் பாலசுப்பிரமணிய பாரதி நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பியாக சினேக பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட எஸ்.பி.யாக செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சரக ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பியாக மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
