ஐஏஎஸ் – ஐபிஎஸ் இடையேயான மோதலை தீர்க்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மத்தியஸ்தராக நியமனம்!

 

கர்நாடகாவைச் சேர்ந்த ரோகினி சிந்தூரி ஐஏஎஸ் மற்றும் டி.ரூபா ஐபிஎஸ் இடையே நிலவும் நீண்டகால மோதலை தீர்க்க, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் மத்தியஸ்தராக நியமனம் செய்துள்ளது. 2023ல் சமூக ஊடகங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி குற்றச்சாட்டுகளைப் பகிர்ந்து கொண்ட விவகாரம் அவதூறு வழக்கு வரை சென்ற நிலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. “இருவரும் சிறந்த அதிகாரிகள், ஆனால் இந்த வழக்கால் தங்களின் எதிர்காலத்தை அவர்களே பாழாக்கிக் கொள்கிறார்கள்” என்று கவலை தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்திற்கு வெளியே சுமுகமாக முடிக்க அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: