சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் பனையூர் பாபு தலைமையில் 1200 பேர் திமுகவில் இணைந்தனர். விசிக துணை பொதுச்செயலாளராக இருந்த பனையூர் பாபு கடந்த 24ம் தேதி அக்கட்சியில் இருந்து விலகினார். 2021 சட்டமன்ற தேர்தலில் செய்யூர் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பனையூர் பாபு. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் பனையூர் பாபு இணைந்தார்.
