சென்னை: புயல் வேகத்தில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்களை மயிலிறகால் வீசாமல், இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை அதிகரிக்கும் நிலையில் பொய்க்கால் குதிரை அரசு வேடிக்கை பார்க்கிறது என்று அவர் குற்றச்சாட்டியுள்ளார். போதைப்பொருள் கடத்தல் கும்பலை ஒடுக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் விஜய்? என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
