சென்னை: வீட்டு வசதித்துறை சார்பில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூட்டரங்கில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் தலைமையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்ககம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர் போக்குவரத்துக் குழுமம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகிய துறைகளின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
