சென்னை: கோவையில் 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்று தர வேண்டும், சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதலமைச்சர் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.
