சென்னை: இன்றைய தமிழக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பின்னுக்கு தள்ளி மீண்டும் வந்தே மாதரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. வந்தே மாதரத்தை தொடர்ந்து 2வதாக தேசிய கீதம் மற்றும் 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து என இன்றைய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பாடப்பட்டுள்ளது.
