தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் விஜய் – அரசுக்கு ஆதரவு தெரிவித்த மதச்சார்பற்ற கட்சிகள்

சென்னை: தொடர்ந்து மூன்றாம் நாளாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடி இருக்கும் நிலையில், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தமிழக முதல்வர் விஜய் முன்மொழிந்தார். இதன் மூலம் தனது தலைமையிலான அரசு மீது நம்பிக்கை கோரி இருக்கிறார் விஜய்.

இந்நிலையில் பேரவையில் பேசிய காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ராஜேஷ்குமார், தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக கூறினார். தமிழ்நாட்டில் பாஜக மறைமுகமாக ஆட்சி செய்ய கூடாது என்பதற்காகவே தவெக-விற்கு ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டார். மதச்சார்பற்ற 5 கட்சிகள் சேர்ந்து ஆதரவளித்து தான் தவெக அரசு ஆட்சியமைக்கும் அளவிற்கு பெருபான்மை பெற்றது என்று குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ செல்லசுவாமி, குடியரசுத்தலைவர் ஆட்சியை தடுக்கவே தவெக-விற்கு ஆதரவு அளித்துள்ளதாக குறிப்பிட்டார். மக்களுக்கு பாதகமான திட்டங்களை செயல்படுத்த நினைத்தால் அதனை எதிர்க்க தங்களது கட்சி தயங்காது என்றார்.இந்த நிலையில் அமமுக-விலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ காமராஜ், தற்போது தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக பேசி இருக்கிறார். இதனை தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தளி ராமச்சந்திரன், மாநில உரிமைகளை பாதுகாக்கவே தவெக-விற்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டார். மலைப்பாம்பு போல் மாநில கட்சிகளை பாஜக விழுங்குகிறது என்றார்.

Related Stories: