சோழவரம் அருகே பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியை வீட்டில் 18 சவரன் நகை திருட்டு

திருவள்ளூர்: சோழவரம் அருகே எட்டப்பாளையத்தில் அரசுப்பள்ளி ஆசிரியை பத்மா வீட்டில் 18 சவரன் நகை, ரூ.50,000 ரொக்கம் திருடப்பட்டுள்ளது. பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியை பத்மா வெப்பத்தின் தாக்கத்தால் காற்று வாங்க கதவை திறந்து வைத்தபோது திருட்டு நடைபெற்றுள்ளது. பார்வை மாற்றுத்திறன் ஆசிரியை வீட்டில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை சோழவரம் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: