ஆம்பூர் அருகே பாலூரில் அதிமுகவைச் சேர்ந்தவரிடம் ரூ.3.06 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆம்பூரைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரிடம் ரூ.3.06 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்தது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக வந்த புகாரில் அதிகாலையில் சோதனை நடத்தினர். பணத்துடன் பிடிபட்ட அதிமுகவைச் சேர்ந்தவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
