- முத்துப்பேட்டை
- டாக்டர்
- மகேந்திரன்
- கண்காணிப்பாளரை
- கால்நடை பராமரிப்பு துறை
- தொகுதி
- திருவாரூர் மாவட்டம்
முத்துப்பேட்டை,ஏப்.21: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டார கால்நடை பராமரிப்பு துறையின் கண்காணிப்பாளர் டாக்டர் மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொதுவாக கறவை மாடு வளர்ப்பில் பால், தயிர், வெண்ணெய், நெய், மோர் ஆகியன விவசாயிகளால் சந்தைப்படுத்தும் பொருட்களாக உள்ளன. இதன் மூலம் கால்நடை வளர்க்கும் விவசாயியின் பொருளாதாரம் பெரிய அளவில் முன்னேற்றம் காணாமல், இடைத்தரகர்கள் பலனடையும் வகையிலேயே இன்றைய சந்தை சங்கிலி உள்ளது. இதனை மாற்றினால் மட்டுமே விவசாயி நல்ல லாபம் ஈட்ட முடியும். மாடு வளர்ப்பில் என்னென்ன மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க முடியும் எப்படி சந்தைப்படுத்தலாம் என்பது குறித்து விவசாயிகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இக்கட்டுரை விளைகிறது.
