- அமலாக்கத் துறை
- சென்னை
- திமுக ராஜ்ய சபா
- Girirajan
- அஇஅதிமுக
- எஸ்.பி. வேலுமணி
- பி தங்கமணி
- சி. விஜயபாஸ்கர்
- எம் ஆர் விஜயபாஸ்கர்
- சி. காமராஜ்
- கேசி வீரமணி
- கே.பி. அன்பழகன்
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- சேலம் எலங்கோவன்
சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.காமராஜ், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சேலம் இளங்கோவன், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா ஆகியோருக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுக்களில், சாலைகள் அமைத்ததில் முறைகேடு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர்கள் மீது வழக்குகள் விசாரணையில் உள்ளது. இதில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதால் இவர்கள் மீது, வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
