மதுரை: கோயில் திருவிழாக்களில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது, அனைத்து சமூகத்தினரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பட்டியல் சமூக மக்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் சமமாக நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
