சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த 1ம் தேதி கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,220க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 760க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. வாரம் தொடக்க நாளில் தங்கம் விலை உயர்வை தான் சந்தித்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,250க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனையானது. வெள்ளி விலை 6வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இதனையடுத்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235, ஒரு கிலோ ரூ. 2,35,000க்கு விற்பனையாகிறது.
