பழுதான மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்

 

ஆத்தூர், ஜூலை 30: ஆத்தூர் நகர பகுதியில் இருந்து கெங்கவல்லி, வீரகனூர் மட்டுமல்லாமல் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக மஞ்சினி சாலை உள்ளது. இந்நிலையில் துலுக்கனூர் ஏரிக்கரை அருகே தெற்கு காடு பகுதியில் மஞ்சினி செல்லும் பிரதான சாலையில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. பழுதடைந்த மின் கம்பத்தின் அருகில் செயல்படும் பால் சொசைட்டியில் தினசரி ஏராளமான விவசாயிகள் பால் ஊற்றுவதற்காக வந்து செல்கின்றனர்.

மேலும், அப்பகுதியில் பஸ் ஸ்டாப் உள்ளதால், தினசரி ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அசம்பாவிதம் ஏற்படும் முன்னரே அகற்ற அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: