“காவிரி பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வரிடம் பேச திராணி இல்லை..” -நயினார் நாகேந்திரன்

 

சென்னை: “காவிரி பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வரிடம் பேச திராணி இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; 2012-ல் காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது; நளினி சிதம்பரம்தான் நீட் தேர்வு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். நீட் தேர்வுக்கு முன்புவரை மருத்துவர்களின் பிள்ளைகள் மட்டுமே மருத்துவம் படித்து வந்தனர்; வினாத்தாள் கசிவை கண்டறிந்து நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது; தர்மேந்திர |பிரதான் மன்னிப்பு கேட்டார் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; தவெக ஆட்சியாளர்கள் ஜனநாயகமே இல்லாமல் ஜனநாயகன் படத்துக்காக தியேட்டரில் உட்கார்ந்துள்ளனர். தியேட்டரில் அமைச்சர் பர்வேஸ் அழுகிறார், மற்றொரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார். ஆக.5ம் தேதி பட்ஜெட் தாக்கலுக்கான பணிகளை செய்யாமல் அனைவரும் தியேட்டரில் உட்கார்ந்துள்ளனர். காவிரி பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வரிடம் பேச திராணி இல்லை. “கர்நாடக முதலமைச்சரிடம் பேசி தண்ணி கேட்க வக்கில்ல. திரையரங்கு சென்று சினிமா பார்க்க மட்டும் முதலமைச்சர் விஜய்க்கு நேரமிருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: