×

பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர் விஜயகாந்த்: சிவகார்த்திகேயன் இரங்கல்

சென்னை: பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர் விஜயகாந்த் என நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்த செய்தி என்னை ஆழ்ந்த துயருக்குள் ஆழ்த்திவிட்டது. எத்தனையோ கோடி உள்ளங்களின் அன்புக்குச் சொந்தக்காரர், அள்ளித்தரும் பண்புக்கும், அரவணைப்பும் தலைமைப்பண்பும் தனக்கே உரிய பாணியில் கொண்ட மேம்பட்ட மனிதர், பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர்,

அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர். அவரது மறைவு திரை உலகம் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் ஓர் மிகப்பெரிய இழப்பு. புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர் விஜயகாந்த்: சிவகார்த்திகேயன் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Sivakarthikeyan ,Chennai ,X ,
× RELATED திருமணமான நடிகருடன் சாய் பல்லவிக்கு தொடர்பு? டோலிவுட்டில் பரபரப்பு