×

பைக் மீது கார் மோதல் இருவர் பரிதாப பலி

ஆண்டிமடம்: அரியலூர் – ஆண்டிமடம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியாயினர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் – விருத்தாச்சலம் சாலையில் உள்ள கருக்கை கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கடலூர் மாவட்டம் டிவி புத்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கனக சபை மகன் ஜெகதீசன் 45, பாவாடை மகன் பழமலை 40 ஆகிய இருவரும் ஆண்டிமடம் அருகே உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக சென்று கொண்டு இருந்தனர். அப்பொழுது சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த ராம் என்பவர் தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறை சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி திரும்பி வரும் வழியில் ஆண்டிமடம் அருகே உள்ள கருக்கை கிராமம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது சாலையில் முன்பு சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பழமலை, ஜெகதீசன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ராஜா சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஜெகநாத், உதவி ஆய்வாளர்கள் தனச்செல்வன், தங்கமணி உள்ளிட்ட ஆண்டிமடம் காவல்துறையினர் பழமலை ஜெகதீசன் ஆகிய இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குரு பெயர்ச்சியை முன்னிட்டு

The post பைக் மீது கார் மோதல் இருவர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Antimadam ,Ariyalur ,Cuddalore district ,
× RELATED ஆசிரியரிடம் வழிப்பறி வழக்கில் 2 இளைஞர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை