×

திருப்போரூர் திருவஞ்சாவடி மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தல்

திருப்போரூர்: திருப்போரூர் மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதி செய்து தரவேண்டும்என மீன பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் திருவஞ்சாவடி தெருவில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு கட்டி திறக்கப்பட்ட இந்த மீன் மார்க்கெட்டை திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இங்கு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செம்மஞ்சேரி, புதிய கல்பாக்கம், நெம்மேலி, சூளேரிக்காடு, பட்டிப்புலம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பெண்கள் மீன்களை எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர். இவர்களிடமிருந்து குறைந்த வாடகை தொகையாக 30 ரூபாய் தினசரி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதற்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் ஏலம்விடப்பட்டு இந்த தொகை வசூல் செய்யும் பணி நடை பெற்றுவருகிறது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக மீன் மார்க்கெட் கட்டிடம் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, மீன் மார்க்கெட் வளாகத்தில் தண்ணீர் வசதி இல்லாத நிலை உள்ளது. இதனால் மார்க்கெட் வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. காலை முதல் மாலை வரை மீன் மார்க்கெட்டின் இரு பக்க கதவுகளும் திறந்து விடப்படுகின்றன. இதனால் கெட்டுப்போன மீன்களையும் கீழே விழும் மீன்களையும் தின்பதற்காக தெரு நாய்கள் மார்க்கெட் வளாகத்தில் சுற்றுகின்றன. மீன் கழிவுகளும் மார்க்கெட் வளாகத்தில் நிரம்பி கிடக்கின்றன.

இவற்றை சுத்தம் செய்யும் பணி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் மீன் விற்கும் பெண்கள் அருகில் உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து சுத்தம் செய்கின்றனர். இருப்பினும் இங்கு கடை வைத்து பிழைப்பு நடத்தும் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சுகாதார வசதி செய்து தரப்படவில்லை. சுகாதாரமின்றி மீன் மார்க்கெட் செயல்படுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் மீன் வாங்க வரும் ெபாதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, திருப்போரூர் திருவஞ்சாவடி மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதி செய்து தரவேண்டும் என மீனவ பெண்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருப்போரூர் திருவஞ்சாவடி மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,Tiruvanjavadi ,Thiruvanchavadi Street, Tiruporur ,
× RELATED திருப்போரூர் பேருந்து நிலையத்தில்...