×

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிப்பு

டெல்லி : தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் 17ம் தேதியுடன் முடிவடைகிறது. இதே போன்று தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நிறைவடைகிறது. இதனால் 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

தேர்தலுக்காக தயாராகும் மாநிலங்களில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.இதில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் ஏற்கனவே ஆய்வுகள் முடிந்த நிலையில், இந்த மாத இறுதியில் தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு சென்று தலைமை தேர்தல் ஆணையர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனிடையே அக்டோபரில் தொடங்கி நவம்பருக்குள் 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana ,Madhya Pradesh ,Rajasthan ,Delhi ,
× RELATED மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800...