×

மது போதையில் வாகனம் ஓட்டிய வாலிபருக்கு கத்திக்குத்து

அம்பத்தூர்: அம்பத்தூர் புதூர் மீன் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்ஜேஷ்(26). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் அதிவேகமாக தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இதனை அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன்(43) என்பவர் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. பின்னர் தன் வீட்டிலிருந்து கத்தியை கொண்டுவந்த ரவிச்சந்திரன், மது போதையில் இருந்த மஞ்ஜேஷை வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த மஞ்ஜேஷை அவரது மனைவி ஜனனி மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் ரவிச்சந்திரன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் புழல் சிறையில் அடைத்தனர்.

The post மது போதையில் வாகனம் ஓட்டிய வாலிபருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Tags : Ampathur ,Manjesh ,Budur fish ,Dinakaran ,
× RELATED போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திய ஆம்னி பேருந்துக்கு அபராதம்