×

தொழில்நுட்பம் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களை ஓட்டுபோட அனுமதிக்கலாம்

புதுடெல்லி: டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேசியதாவது: வெளிநாட்டு வாழ் இந்தியர்களை தற்போது வாக்களிக்க அனுமதிக்கும் காலம் வந்துவிட்டது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாம் தகுதியான வெளிநாட்டு இந்திய வாக்காளர்களை மின்னணு முறையில் அனுப்பப்பட்ட தபால் ஓட்டு முறை (ETBPS) மூலம் தேர்தலில் பங்கேற்க வசதியாக தொழில்நுட்பம் சார்ந்த வழிமுறையை செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டது. இதில் உள்ள சவால்களை சரிசெய்ய வெளியுறவு அமைச்சகத்துடன் தேர்தல் கமிஷன் விவாதித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தொழில்நுட்பம் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களை ஓட்டுபோட அனுமதிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Indians ,New Delhi ,Chief Election Commissioner ,Rajeev Kumar ,Delhi ,Dinakaran ,
× RELATED இதை எல்லாம் மோடி பேச மாட்டார் 70 கோடி...