×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், காஞ்சிபுரம், தருமபுரி, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Weather Centre ,Chennai ,Chennai Meteorological Centre ,Ramanathapuram ,Sivaganga ,Trichy ,Pudukkottai ,Thanjai ,Kallakurichi ,Viluppuram ,Tiruvannamalai ,Krishnagiri ,Tirupathur ,Salem ,Kanchipuram ,Tarumpuri ,Chengalpattu ,Nadu ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...