×

தமிழ்-தமிழ்நாடு என பாசாங்கு தேர்தல் முடிந்ததும் கிழிந்து தொங்குகிறது பாசிஸ்ட்டுகளின் முகமூடி: உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை திமுக நடத்தி உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப்பணிகளுக்கு-இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட துயர் துடைக்க-தொழில் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கு என எதற்கும் தமிழ்நாட்டுக்கு நிதியில்லை. ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடே இல்லை.

தமிழ்-தமிழ்நாடு என பாசாங்கு செய்த பாசிஸ்ட்டுகளின் முகமூடி தேர்தல் முடிந்ததும் கிழிந்து தொங்குகிறது. மோடியின் பலவீனமான பதவி நாற்காலியின் கால்களுக்கு வலுவூட்டும் பட்ஜெட்டை விட, அனைத்து தரப்பு மக்களும் எழுந்து நிற்பதற்கு ஊன்றுகோல் தரும் பட்ஜெட் தான் நாட்டுக்குத் தேவை. இனியும் மாற்றாந்தாய் மனப்பான்மை தொடர்ந்தால், திமுக நடத்தியுள்ள இந்த ஆர்ப்பாட்டங்கள், நாளை மக்கள் போராட்டங்களாக மாறிவிடும் என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

The post தமிழ்-தமிழ்நாடு என பாசாங்கு தேர்தல் முடிந்ததும் கிழிந்து தொங்குகிறது பாசிஸ்ட்டுகளின் முகமூடி: உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Udhayanidhi Stalin ,Chennai ,Minister ,Udayanidhi Stalin ,DMK ,Union BJP government ,Union Budget ,Chennai Metro Rail ,Nadu ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...