×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Meteorological Centre ,Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Research Centre ,Chennai Weather Centre ,Dinakaran ,
× RELATED சூரியன் குத்துக்கதிர்கள் நகருவதால்...