×

தருமபுரி, நீலகிரி, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

டெல்லி: தருமபுரி, நீலகிரி, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் கடுமையான வெப்பதால், மக்கள் பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தருமபுரி, நீலகிரி, சேலம், கோவை, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வெப்பம் வாட்டி வதைக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தருமபுரி, நீலகிரி, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tharumapuri ,Nilgiri ,Salem ,Weather Centre ,Delhi ,Weather Center Information ,Dinakaran ,
× RELATED இணைப்பு உரங்களை வாங்குமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க கூடாது