×

நாடாளுமன்றத்துக்குள் நடந்த நிகழ்வுக்கு வேலைவாய்ப்பின்மையே இளைஞர்களின் கோபத்துக்கு காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: நாடாளுமன்றத்துக்குள் நடந்த நிகழ்வுக்கு வேலைவாய்ப்பின்மையே காரணம் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்.பி.க்கள் இருக்கும் இடத்திற்குள் திடீரென 2 பேர் குதித்தனர். அவர்கள் இருவரும் அங்கு வண்ண புகை குண்டுகளை வீசினர். நாடு முழுவதையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதிக பாதுகாப்பு நிறைந்த இடத்திற்குள் அவர்கள் எவ்வாறு சென்றனர், இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசு மீது குற்றம்சாட்டி வருகிறது.

பரிந்துரை பாஸ் வழங்கிய பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்; இது ஏன் நடந்தது? நாட்டின் முக்கிய பிரச்சினை வேலையின்மை. பிரதமர் மோடியின் கொள்கைகளால் நாட்டின் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் போனது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வே பட்டதாரி இளைஞர்களின் கோபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டினார்.

The post நாடாளுமன்றத்துக்குள் நடந்த நிகழ்வுக்கு வேலைவாய்ப்பின்மையே இளைஞர்களின் கோபத்துக்கு காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Parliament ,Rahul Gandhi ,Delhi ,Lok Sabha ,
× RELATED பல்வேறு காவல் நிலையங்களில் பாஜ நிர்வாகி மீது காங்கிரசார் புகார்