×

ஒடிசா ரயில் விபத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாவட்ட நிர்வாகமும் மீட்புப் பணியில் தீவிரம்: ஒடிசா தலைமைச் செயலாளர்

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாவட்ட நிர்வாகமும் மீட்புப் பணியில் தீவிரமாகியுள்ளனர் என்று ஒடிசா தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடனுக்குடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. உடல்கள் அடையாளம் காணப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஒடிசா ரயில் விபத்து மீட்பு பணியில் 7 தேசிய மீட்பு குழு படையினர், 5 ஒடிசா மாநில மீட்பு குழு படையினர், 24 தீயணைப்பு படை வீரர்கள் குழு, உள்ளூர் போலீசார், தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாவட்ட நிர்வாகமும் மீட்புப் பணியில் தீவிரம்: ஒடிசா தலைமைச் செயலாளர் appeared first on Dinakaran.

Tags : National Disaster Rescue Forces and District Administration ,Odisha ,Chief Secretary ,National Disastrophe Rescue Forces and District Administration ,Odisha Rail ,
× RELATED ஒடிசா முதல்வருக்கு ரூ71 கோடி சொத்து