×

தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் மீது குண்டாஸ்

ஈரோடு, நவ. 22: ஈரோட்டில் தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு டவுன், மொடக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கடந்த மாதம் ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து தெருவை சேர்ந்த ஜானி மகன் பாபு ராஜ் (எ) பாபு (24), வெண்டிபாளையம் பாலதண்டாயுதபாணி வீதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் கண்ணன் (31), லக்காபுரம் சாணார் மேடு மாணிக்கம் மகன் பிரபாகரன் (எ) பூபதி (29) ஆகியோரை
போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மீது ஈரோடு டவுன் போலீஸ் சப்-டிவிசனுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் 8க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க ஈரோடு எஸ்பி. தங்கதுரை, கலெக்டர் கதிரவனுக்கு பரிந்துரைத்தார். இதன்பேரில், பாபு, கண்ணன், பிரபாகரன் ஆகிய மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கதிரவன் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரிடமும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட போலீசார் மூலம் நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், நடப்பாண்டு இதுவரை தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 21 பேர், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தியதாக 11 பேர் என 32 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஈரோடு எஸ்பி. தங்கதுரை தெரிவித்தார்.

Tags : teenagers ,crimes ,
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு