×

கோவில் பூசாரிகள் நலச்சங்க கூட்டம்

சிவகங்கை, நவ.21: சிவகங்கையில் மாவட்ட கோவில் பூசாரிகள் நலச்சங்க கூட்டம் நடந்தது. மண்டலதலைவர் சண்முகசுந்தரம், மாவட்டதலைவர் வினோத்குமார் தலைமை வகித்தனர். மாவட்டதுணைத் தலைவர் சங்குமணிகண்டன் வரவேற்றார். மாநில தலைவர் வாசு, மாநில பொருளாளர் சுந்தரம், மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட பொருளாளர் திருவள்ளுவர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழகஅரசு கோவில் பணியாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்கி வருகிறது. அதுபோல் பூசாரிகளுக்கும் மாத ஒய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்திற்கு தனியாக ஒரு உதவி ஆணையாளர் அலுவலகத்தை சிவகங்கையில் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Temple Priests Union Meeting ,
× RELATED மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல்...