×

மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு மயிலாடியில் 24ல் ஆராட்டு வைபவம் நடத்த அனுமதி

நாகர்கோவில், நவ.20: கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏ ஆஸ்டின் வெளியிட்டுள்ள அறிக்கை: மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்பட தொகுதியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும், வரும் 20ம் தேதி சூரசம்ஹார வைபவம் நடத்துவதற்கு ஏற்கனவே மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். அதன் அடிப்படையில் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து சூரசம்ஹார விழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்தவிழாவை தொடர்ந்து ஆண்டுதோறும் மயிலாடியில் முருக பெருமானுக்கு பாரம்பரியமாக ஆராட்டு விழா நடத்தப்படுவது ஐதீகமாகும்.

எனவே இந்தாண்டு வரும் 24ம் தேதி மயிலாடியில் ஆராட்டு விழா நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று முந்தைய கலெக்டரிடம் கோரிக்கை வைத்திருந்தேன். இந்நிலையில் நேற்றுமுன்தினம் தற்ேபாதைய கலெக்டரை சந்தித்து ஆராட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன் அடிப்படையில் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து மக்கள் பெருந்திரளாக கூடாமல், மருங்கூரில் இருந்து முருக பெருமானை எடுத்து வந்து மயிலாடியில் 24ம் ேததி ஆராட்டு வைபவம் நடத்தலாம் என்று கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். எனவே அரசின் விதிமுறைகளை கடைபிடித்து மயிலாடியில் ஆராட்டு வைபவம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Marungur Subramania Swamy ,ceremony ,Arattu ,Mayiladuthurai ,
× RELATED பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில்...