×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம்

திருப்பூர், நவ.11: தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் மாநகர பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தீபாவளி பண்டிகை வரும் நவ.14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு புத்தாடை வாங்க திருப்பூர் குமரன் ரோடு, குள்ளிசெட்டியார் வீதி, பெரிய கடை வீதி போன்ற பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகரித்து வருகிறது. இதனால், மாநகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாநகர பகுதிக்குள் கனரக வாகனங்கள் செல்ல நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்நிலையில், மாநகர பகுதியில் கனரக வாகனங்கள் போலீஸ் விதித்த நேர கட்டுபாட்டை மீறி மாநகர பகுதிக்குள் செல்வதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். நேர கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் செல்லும் கனரக வாகனங்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Crowds ,shops ,Diwali ,
× RELATED கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன்...