×

நாகர்கோவிலில் ஓட்டல் சப்ளையர் கொலை வாலிபர்களிடம் 2 வது நாளாக விசாரணை

நாகர்கோவில் : நாகர்கோவிலில் ஓட்டல் சப்ளையர் கொலையில், 4 நாட்கள் ஆகியும் இதுவரை துப்பு துலங்கவில்லை. வாலிபர்கள் சிலரிடம் 2 வது நாளாக விசாரணை நடத்தி வரும் போலீசார், செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.  நாகர்கோவில் சரக்கல்விளை பார்க் தெரு பகுதியில் வசித்து வந்தவர் சுகுமாறன் (58). திருமணமாக வில்லை. ஒட்டலில் சப்ளையராக வேலை பார்த்ததுடன், தனக்கு வந்த இன்சூரன்சு பணத்தை வட்டிக்கு கொடுத்து தொழில் செய்து வந்தார். கடந்த 6ம் தேதி இரவில், மர்ம நபர்கள் வீடு புகுந்து சுகுமாறனை கழுத்து அறுத்து கொலை செய்தனர். அவர் அணிந்திருந்த செயின், பிரேஸ் லேட் மற்றும் மோதிரம் திருடப்பட்டு இருந்தது. அவரது பைக்கையும் காணவில்லை. சுகுமாறனை கொலை செய்து விட்டு நகைகள், பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த ெகாலை ெதாடர்பாக விசாரணை நடத்த டி.எஸ்.பி. வேணுகோபால் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ெகாலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். இதில் ஹோமோசெக்ஸ் கும்பல் இந்த கொலையில் சம்பந்தப்பட்டு இருப்பார்களோ? என்ற  கோணத்திலும் விசாரணை செல்கிறது. இது தொடர்பாக கோட்டார் பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதிலும் துப்பு துலங்க வில்லை. தொடர்ந்து 2 வது நாளாகவும் அவர்களிடம் விசாரணை நடந்தது. சுகுமாறனின் செல்போன் நம்பருக்கு வந்த அழைப்புகளின் அடிப்படையில் அடிக்கடி தொடர்பில் இருந்த சில செல்போன் நம்பர்களை போலீசார் தொடர்பு கொண்டனர்.

அப்போது அந்த செல்போன் நம்பர்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தன. அதன் அடிப்படையில் அவர்கள் யார்? என்பது பற்றிய விபரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை இந்த வழக்கில் துப்பு எதுவும் துலங்க வில்லை என போலீசார் கூறினர். தற்போது முதல்வர் பாதுகாப்பு பணியில் போலீசார் பிஸியாகி விட்டதால், இனி இரு நாட்கள் கழித்து விசாரணை தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது.

Tags : Hotel supplier ,Nagercoil ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது