×

உயிர் பிழைத்த பெண்கள் நிலக்கடலை கிலோ ரூ.54க்கு ஏலம்

க.பரமத்தி, நவ.5: நிலக்கடலை ஒரு கிலோவிற்கு ரூ.7க்கு உயர்ந்து ஏலம் போனது. இதனால் ரூ.7 உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கரூர் மாவட்டத்தில் கரூர், க.பரமத்தி ஆகிய இரு வெவ்வேறு ஒன்றிய கிராம புற பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இதனை வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடந்த ஏலத்தில் 84 மூட்டைகளில் 2875 எடைக்காக நடந்த ஏலத்தில் நிலக்கடலை கிலோவிற்கு அதிக பட்சமாக ரூ.54க்கும், குறைந்த பட்சமாக ரூ.48க்கும் ஏலம் போனது. கடந்த மாதத்தை நிலக்கடலை ஒரு கிலோவிற்கு ரூ.7க்கு உயர்ந்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : women ,
× RELATED பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை சிஆர்பிஎப் டிஐஜி டிஸ்மிஸ்