×

கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

மதுரை, நவ.3: கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிறது. மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தர்காவில் இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு தர்காவில் உள்ள கொடிமரத்தில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.பின்னர் இரவு மின் அலங்காரத்தில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறும். சிலம்பாட்டம், மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை, குதிரையுடன் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் சந்தனக்கூடு வலம் வரும். நாளை 4ம் இரவு 9 மணிக்கு சையது மதானீ மற்றும் ராபியா சிஷ்டி உருது கவ்வாலி கச்சேரி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையதுபாபு ஜான், சுல்தான் பாஷா, தாஜூதீன், பாபு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Tags : Chandanakudu ,festival ,Goripalayam Dargah ,
× RELATED பொற்ெகாடியம்மன் திருவிழாவுக்கு 25...